Home

25 February 2022

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!



23 February 2022

மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 28/02/2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01/03/2022 முற்பகல் பணியில் சேர்ந்திட ஆணையர் அறிவுறுத்தல்.

மாறுதல் ஆணை பெற்றவர்கள் 28.02.2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.03.2022 முற்பகல் பணியில் சேர்வதற்கான ஆணையரின் செயல்முறைகள். 

IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு கலந்தாய்வில் பங்கேற்று பதவி உயர்வு / பணி மாறுதல் / பணிநிரவல் ஆணைகளை பெற்ற ஆசிரியர்களை 28/02/2022 அன்று பிற்பகல் விடுவித்து 01/03/2022 அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 






16 February 2022

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021 இல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு.

அரசாணை எண் : 39 நாள் : 14/02/2022 

New Health Insurance Scheme for Employees, 2021 Inclusion of Corona treatment (COVID-19) under specified illness list in respect of employees under New Health Insurance Scheme 2021 and Pensioners. (including spouse)/Family Pensioners under New Health Insurance Scheme 2018 Implementation of the Announcement made by the Hon'ble Chief Minister Payment of Rs.1.00 crore each under New Health - Insurance Scheme 2021 for employees and New Health Insurance Scheme 2018 for Pensioners Family Pensioners to United India Insurance Company Limited - Orders - Issued. 

ORDER : The Hon'ble Chief Minister had made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021 : 

"மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்." 


Download Link


அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். 

அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை நியமனம் செய்து பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்க இயலாது. மேலும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வியாண்டு வரையில் 50% பதவி உயர்வுக்கான காலிப்பணியிடத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2% காலிப்பணியிடங்களான மொத்தம் 235 பணியிடங்களில் 196 பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 39 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டு அப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Download Link

15 February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியப் பட்டியல்கள் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 க்கான தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மற்றும் ஊதியப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  







14 February 2022

15.02.2022 முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!



11 February 2022

பள்ளி இறுதித் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் / தந்தை பெயர் /தாயார் பெயர் / முகப்பெழுத்து / பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தேர்வுத்துறை மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு சார்ந்த மாணவ / மாணவியர்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளியில் திருத்தங்கள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆணை வழங்குவது குறித்தும் அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 



10 February 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென புதிய அரசாணை வெளியீடு.

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு. 


அரசாணை எண் : 15, நாள் : 10/02/2022




11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 


சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பாணைக்கு இணங்க, மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டியுள்ள நிலையில் 11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை-1 /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 /தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்


மேலும் அதனையடுத்து 14.2.2022 முதல் திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய்வுகள் நடைபெறும் எனவும், இது சார்ந்த தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேற்படி ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 




02 February 2022

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு. 


இன்று 02/02/2022 மாவட்டத்திற்குள் நடைபெற்று முடிந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு. 

High School HM Vacants


30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



EMIS SCHOOL புதிய செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!

EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்
பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 

இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Fully not working என்பதை தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது

Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்

மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்

Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 

School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த பின்பு தான் பள்ளி விவரங்கள் Sync ஆகும் 

அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும். 


பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால் எந்தெந்த வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்

உதாரணமாக ஒரு உயர் நிலைப் பள்ளியானது அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Section யும் select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்

Teachers Attendance School Login

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்

Teacher List Strudent List Stored Locally என வரும் Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு முறை Click செய்து OD Training Dt Deputation A Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்

Students Attendance Teacher Individual Login

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 

வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Local body Attendance School Login

பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். 


குறிப்பு

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும். 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன ?

2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.


* ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது.உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.


*நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆகா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


*சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


*ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  


*புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


*எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது.


*ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


*One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்


*நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்


*ரயில் நிலையங்களையும் நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரிய அளவில் திட்டம் வகுக்கப்படும்.


*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை


*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 


*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது                                    


*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.


*விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிப்பு


*ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.


*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன


*வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

01 February 2022

அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்து சான்றிதழ் (PLI Annual Statement) வாங்க இனி தபால் நிலையம் செல்ல வேண்டாம். சுலபமாக வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சேமிப்புக்காக வேண்டி அஞ்சலக ஆயுள் காப்பீடு (PLI) செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தும் நபர் அந்த நிதி ஆண்டில் PLI பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழை தபால் நிலையத்தில் வாங்கி வருமான வரி படிவத்துடன் இணைக்க வேண்டியது அவசியமாகும். 

08 September 2021

பாடப் புத்தகங்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு.

பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.


இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.


எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.


இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.

07 September 2021

முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ் : நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 


டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.


அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.


சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.


ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. 


முதலமைச்சரின் விளம்பரம் இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டது விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஊக்க ஊதியம் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 

Download Order 👇👇👇

Incentive Related Order

தமிழக அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அனுமதி.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை :


நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு!

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.


அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. 


மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

ஜாக்டோ ஜியோ 



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts