Home

05 September 2021

"ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்" - ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் புகழாரம்.

ஆசிரியர் தினம்:

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நாட்டின் உயர் பதவியில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

04 September 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி செ.கு.எண்: 54, நாள்: 04.09.2021

ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவது போன்றவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேஇதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு ஏதுவாக, பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% மாக உயர வாய்ப்பு.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட். நிலுவையில் இருந்த 11% DA மற்றும் DR சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 2021 கான அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. 

03 September 2021

மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு கோருதல் படிவம்

2021 ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. (அரசாணை எண்.84, நாள் - 23/08/2021 மனிதவள மேலாண்மைத் துறை)

நடப்பு கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

02 September 2021

அரசுப் பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் குறித்து அறிவிப்பு

🔥 தனது வாழ்நாளில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் கனவாகும். அரசு பணியாளர்களின் இக்கனைவை நனவாக்கும் வகையில், அரசு ஒரு நலத்திட்டமாக பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடு /அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் "வீடு கட்டும் முன்பணத்தினை" வழங்குகிறது. 

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசாணை எண் 197, நாள் : 01/09/2021. பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60 லிருந்து ரூ.110 ஆக உயர்த்தி செப்டம்பர் 2021 முதல் பிடித்தம் செய்யப்படும் என ஆணையிடப்பட்டு உள்ளது. 

24 August 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.



📍 தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என நாளிதழ் செய்தி வெளியாகி உள்ளது. 

21 August 2021

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி

✍️ 9 முதல் 12 வகுப்புகள் வரை மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15 க்குப் பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு. 

17 August 2021

மேல்நிலை வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021-22

முன்னுரிமைப் பாடதிட்டம்

2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு. அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021 இன் படி 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22 ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்ட விவரம் குறித்த இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.




15 August 2021

12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 - தேசியம் என்பதன் பொருள்

1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

தேசியம் என்பதன் பொருள் 

தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியுடன் இருத்தல். தனது நாட்டை ஏனைய நாடுகளை விட உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுதல். தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல்.  

06 August 2021

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு அலகு 1 அறிமுகம்

 1. முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

அறிமுகம் : 

அனைவருக்கும் வணக்கம்.  முதலில் ஒரு சிறு கேள்வியுடன் தொடங்கலாம். வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுபவை எவை? 

🖍️உலகில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது எந்த இடத்தில் நடைபெற்றது எந்த ஆண்டு நடைபெற்றது என்று கட்டாயம் வரலாற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவை இரண்டும் இல்லாமல் வரலாறு எழுத முடியாது. அதன் காரணமாகத் தான் இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டும் வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுகின்றது. 

05 August 2021

12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 அறிமுகம்

 1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி.

அறிமுகம். 

✍️ இந்தியா இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடாக இருந்தது. மூலப் பொருட்கள் உற்பத்தியிலும் கைவினை தயாரிப்புகளிலும் முன்னணியில் இருந்தது. இந்திய பொருட்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக இருந்தது. அதனால் உலகின் மிகச் சிறந்த ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்கியது. ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை தலைகீழாக மாறியது. 

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts