Home

Showing posts with label Mahajanapadas. Show all posts
Showing posts with label Mahajanapadas. Show all posts

04 March 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - அவந்தி, பிரத்யோதா

அவந்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாளவத்தைச் (உஜ்ஜயினி மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக அவந்தி இருந்தது. வெட்ராவதி (பேட்வா) ஆறு அவந்தி நாட்டை இரண்டாகப் பிரிந்தது. இதன் முதன்மைத் தலைநகரம் உஜ்ஜயினி.

02 March 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - வத்சம், உதயணன்

வத்சம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக வத்சம் இருந்தது. வத்சம் யமுனை ஆற்றின் வலது கரையில் அமைந்து இருந்தது. அங்கு நேர்த்தியான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் தலைநகரம் கௌசாம்பி அல்லது கோசாம்பி. இது அலகாபாத்திற்கு தெற்கே சுமார் 38 மைல்கள் (அதாவது 64 கி.மீ.) தொலைவில் தற்போதுள்ள கோசம் என்ற இடத்தில் அமைந்திருந்தது.

29 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - அங்கம், காசி

அங்கம் 

கிழக்கு பீகாரில் உள்ள மாங்கீர் மற்றும் பாகல்பூர் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாக அங்கம் இருந்தது. இதன் தலைநகரம் சம்பா அல்லது மாலினி. இது சம்பா என்ற ஆற்றின் பெயரால் அழைக்கப்பட்டது. அங்க நாட்டில் சம்பா, கங்கை ஆகிய இரு ஆறுகள் பாய்ந்தன. இவ்விரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில்தான் சம்பா நகரம் அமைந்திருந்தது.

27 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - கோசலம், பிரசேனஜித்

கோசலம் 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக கோசலம் இருந்தது. மேற்கே கோமதி நதிக்கும் கிழக்கே சதாநிரா நதிக்கும் இடையே அமைந்திருந்தது. சராயு நதி கோசலத்தை இரண்டாகப் பிரித்தது. வடக்கே சிராஸ்வதியும் தெற்கே குஷாவதியும் அதன் தலைநகரங்களாக இருந்தன.

25 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - சான்றுகள்

மகாஜனப்பதங்கள்
ஜனபதம் என்பது ஜனா என்ற சொல்லில் இருந்து வந்தது. இதில் "ஜனா என்றால் இனக்குழு" என்றும் "ஜனபதம் என்றால் இனக்குழு தன் பாதம் பதித்த இடம்" என்றும் பொருள். அதாவது பின் வேதகாலத்தில் ஒவ்வொரு இனக்குழுவினரும் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தனர். அங்கு வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசை தோற்றுவித்தனர். அவையே ஜனபதங்கள் என்று அழைக்கப்பட்டன. ஜனபதங்கள் வளங்களுக்காகவும் அரசியல் மேலாதிக்கத்திற்காகவும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன. அதில் சில ஜனபதங்கள் வலிமையாக இருந்ததால் அருகிலிருந்த மற்ற ஜனபதங்களைக் கைப்பற்றிக் கொண்டான. அதன் விளைவாக ஆட்சியாளரின் அதிகாரம் பெருகியது; அவரது எல்லையும் விரிவடைந்தது. இறுதியில் ஜனபதங்கள் மறைந்து "மகாஜனப்பதங்கள்" என்ற பெரிய அரசுகள் மலரத் தொடங்கின. 

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts