03 September 2021

நடப்பு கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவின் போது தொடக்க , நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான "டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2021-2022) மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment

Featured Post

IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0

வருமான வரி கணிப்பு படிவம்  நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0  (Old Regime and New Regime)  Financial Year 2...