அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் :
06 September 2021
05 September 2021
வ.உ.சி.பெயரில் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் தமிழகத்தில் தோன்றிய சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த தலைவர். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை நிறுவினார். சுதேசி இயக்கத்தின் செயல் வடிவமாக எழுச்சி பெற்ற வ.உ.சி. நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களின் கடலாதிக்க முற்றுரிமைக்கு சவால்விடும் வகையில் முதன் முதலாக கப்பலோட்டினார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
டெல்லி சட்டப்பேரவை முதல் செங்கோட்டை வரை கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை
டெல்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் சுரங்கப்பாதை போன்ற ஒரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி செய்தித் தொடர்பாளர் ராம் நிவாஸ் கோயல் அளித்த பேட்டியில், இந்தச் சுரங்கப்பாதை டெல்லி சட்டப்பேரவையை செங்கோட்டையுடன் இணைக்கிறது என்றும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது வீரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.
1993 இல் நான் எம்எல்ஏ ஆனபோது, செங்கோட்டைக்கு செல்லும் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை அறிந்ததும், அதன் வரலாற்றை தேட முயற்சித்தேன். ஆனால் அது தெளிவாக இல்லை" என்று அவர் கூறினார். இப்போது நாம் சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியை மட்டுமே கண்டறிந்து உள்ளோம், ஆனால் நாங்கள் அதை மேலும் தோண்ட மாட்டோம், ஏனென்றால் சுரங்கப்பாதையின் அனைத்து வழிகளும் சுரங்கப்பாதை திட்டங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளால் அழிக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1912 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. தற்போது டெல்லி சட்டப்பேரவை செயல்பட்டு வரும் இந்த கட்டிடம் அந்த காலகட்டத்தில் மத்திய சட்டப்பேரவையாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 1926 ஆம் ஆண்டு அது நீதிமன்றமாக மாற்றப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர ஆங்கிலேயர்கள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தினர் என்று கோயல் தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்திற்குள் தூக்கு அறை ஒன்று இருப்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம், ஆனால் அதை ஒருபோதும் திறக்கவில்லை. இப்போது சுதந்திரத்தின் 75 வது ஆண்டு, இந்த அறையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த அறையை சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடமாக மாற்றும் எண்ணம் உள்ளது. சுதந்திரத்துடன் தொடர்புடைய டெல்லியில் உள்ள சட்டப் பேரவையின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, தூக்கு அறையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன் திறக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
"ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்" - ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் புகழாரம்.
ஆசிரியர் தினம்:
ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நாட்டின் உயர் பதவியில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
04 September 2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி செ.கு.எண்: 54, நாள்: 04.09.2021
ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவது போன்றவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேஇதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு ஏதுவாக, பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% மாக உயர வாய்ப்பு.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட். நிலுவையில் இருந்த 11% DA மற்றும் DR சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 2021 கான அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
03 September 2021
மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு கோருதல் படிவம்
2021 ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. (அரசாணை எண்.84, நாள் - 23/08/2021 மனிதவள மேலாண்மைத் துறை)
நடப்பு கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
02 September 2021
அரசுப் பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் குறித்து அறிவிப்பு
🔥 தனது வாழ்நாளில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் கனவாகும். அரசு பணியாளர்களின் இக்கனைவை நனவாக்கும் வகையில், அரசு ஒரு நலத்திட்டமாக பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடு /அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் "வீடு கட்டும் முன்பணத்தினை" வழங்குகிறது.
பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசாணை எண் 197, நாள் : 01/09/2021. பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60 லிருந்து ரூ.110 ஆக உயர்த்தி செப்டம்பர் 2021 முதல் பிடித்தம் செய்யப்படும் என ஆணையிடப்பட்டு உள்ளது.
24 August 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
21 August 2021
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி
✍️ 9 முதல் 12 வகுப்புகள் வரை மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15 க்குப் பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.
19 August 2021
18 August 2021
17 August 2021
மேல்நிலை வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021-22
16 August 2021
12 ஆம் வகுப்பு வரலாறு வீடியோ வகுப்பு - அலகு 3
12th History - Video Class - 2020 TM - Unit 3
Videos Link 👇👇👇
15 August 2021
12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 - தேசியம் என்பதன் பொருள்
1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
தேசியம் என்பதன் பொருள்
தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியுடன் இருத்தல். தனது நாட்டை ஏனைய நாடுகளை விட உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுதல். தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
10 August 2021
Featured Post
IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0
வருமான வரி கணிப்பு படிவம் நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0 (Old Regime and New Regime) Financial Year 2...

-
Income Tax Form Latest Version 2.0 (Old Regime and New Regime) Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this So...
-
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 25/02/2025
-
TN State Board Public Exam - 12th STD History Previous Year Question Papers