Home

21 July 2022

12th STD History - Unit 3 PPT

 12 ஆம் வகுப்பு வரலாறு

அலகு 3 PPT 

தயாரிப்பு 

க. சுந்தரமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் 

UNIT 3 PPT

04 March 2022

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்!!!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



11th Genaral Subject Syllabus TM

11th Vocational Subjects Syllabus TM



03 March 2022

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு மீள நடத்துதல் குறித்து ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கால அட்டவணை வெளியீடு!

2021-22 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் (EMIS Online) பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் சார்பான கால அட்டவணை வெளியிடப்பட்டு (பதவி வாரியாக) கலந்தாய்வு நடைபெற்று வந்தது.


இந்நிலையில் பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 15.2.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிருவாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 04/03/2022 முதல் 16/03/2022 வரை ஆசிரியர்களுக்கு மாறுதல்கள் / பதவி உயர்வுகள் / பணிநிரவல் கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 





02 March 2022

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்களுக்கான தேதி அட்டவணை வெளியீடு.

2021-22 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தேதி அட்டவணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் இன்று காலை வெளியிட்டார். 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு இவ்வாண்டு தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள்  நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வுக்கான தேதி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 






25 February 2022

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!



23 February 2022

மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 28/02/2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01/03/2022 முற்பகல் பணியில் சேர்ந்திட ஆணையர் அறிவுறுத்தல்.

மாறுதல் ஆணை பெற்றவர்கள் 28.02.2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.03.2022 முற்பகல் பணியில் சேர்வதற்கான ஆணையரின் செயல்முறைகள். 

IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு கலந்தாய்வில் பங்கேற்று பதவி உயர்வு / பணி மாறுதல் / பணிநிரவல் ஆணைகளை பெற்ற ஆசிரியர்களை 28/02/2022 அன்று பிற்பகல் விடுவித்து 01/03/2022 அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 






16 February 2022

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021 இல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு.

அரசாணை எண் : 39 நாள் : 14/02/2022 

New Health Insurance Scheme for Employees, 2021 Inclusion of Corona treatment (COVID-19) under specified illness list in respect of employees under New Health Insurance Scheme 2021 and Pensioners. (including spouse)/Family Pensioners under New Health Insurance Scheme 2018 Implementation of the Announcement made by the Hon'ble Chief Minister Payment of Rs.1.00 crore each under New Health - Insurance Scheme 2021 for employees and New Health Insurance Scheme 2018 for Pensioners Family Pensioners to United India Insurance Company Limited - Orders - Issued. 

ORDER : The Hon'ble Chief Minister had made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021 : 

"மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்." 


Download Link


அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். 

அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை நியமனம் செய்து பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்க இயலாது. மேலும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வியாண்டு வரையில் 50% பதவி உயர்வுக்கான காலிப்பணியிடத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2% காலிப்பணியிடங்களான மொத்தம் 235 பணியிடங்களில் 196 பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 39 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டு அப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Download Link

15 February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியப் பட்டியல்கள் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 க்கான தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மற்றும் ஊதியப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  







14 February 2022

15.02.2022 முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!



11 February 2022

பள்ளி இறுதித் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் / தந்தை பெயர் /தாயார் பெயர் / முகப்பெழுத்து / பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தேர்வுத்துறை மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு சார்ந்த மாணவ / மாணவியர்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளியில் திருத்தங்கள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆணை வழங்குவது குறித்தும் அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 



10 February 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென புதிய அரசாணை வெளியீடு.

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு. 


அரசாணை எண் : 15, நாள் : 10/02/2022




11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 


சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பாணைக்கு இணங்க, மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டியுள்ள நிலையில் 11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை-1 /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 /தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்


மேலும் அதனையடுத்து 14.2.2022 முதல் திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய்வுகள் நடைபெறும் எனவும், இது சார்ந்த தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேற்படி ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 




Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts