Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 5

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 7

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 7. குப்தர்  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :        

1. குப்தர் கால சான்றுகள், குப்த அரசர்கள் பற்றி அறியச் செய்தல். 

2. குப்தர் கால அரசியல், சமூக, பொருளாதார நிலையை புரியச் செய்தல்.

3. குப்தர் கால பண்பாடு, நாளந்தா பல்கலைக்கழகம் உணரச் செய்தல்.

4. குப்தர் கால இலக்கியம், அறிவியல் வளர்ச்சியை விளங்கச் செய்தல்.     

ஆயத்தம் செய்தல் :      

1. பொற்காலம் என்பதன் பொருள் என்ன?

2. மௌரியருக்குப் பின் ஆட்சி செய்தவர்கள் யார்?

3. ஆரியபட்டா செயற்கைகோள் யாருடைய பெயரில் உள்ளது?    

பாடக் குறிப்புகள் :      

மௌரியப் பேரரசிற்குப் பின்னர், குப்தர் அரசுதான் ஒரு பெரும் சக்தியாக உருவானது. வணிகக் குழு முறை, கடல் கடந்த வாணிபம், பொருளாதார எழுச்சி, சமஸ்கிருதத்தில் பெரிய படைப்புகள், நுண்கலை, சிற்பம், கட்டிடக்கலை ஆகியவற்றில் பண்பாட்டு முதிர்ச்சி தோன்றின. எனவே "குப்தர் காலம் பொற்காலம்" பண்பாட்டு மலர்ச்சிக் காலம், செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது.

* மூன்று வகையான குப்தர் கால வரலாற்றுச் சான்றுகள்.

* இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள்.

* குப்தப் வம்சத்தின் தோற்றம், ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்.

* முதலாம் சந்திர குப்தரும் பேரரசு உருவாதலும்.

* சமுத்திர குப்தர், இரண்டாம் சந்திர குப்தர், குமார குப்தர், ஸ்கந்த குப்தர்.

* குப்தரின் அரசியல், நிர்வாக முறை, பேரரசின் பிரிவுகள், இராணுவம்.

* பொருளாதார நிலை வேளாண்மையும் வேளாண்மை அமைப்பும்.

* நில வரிகள், நிலக் குத்தகை முறை, நிலக்கொடை, பாசன முறை.

* சுரங்கத் தொழில், உலோகவியல், வணிகம், வர்த்தகம்.

* பண்பாட்டு மலர்ச்சி, கலை கட்டடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள்.

* சமஸ்கிருத இலக்கியம், இலக்கணம், புராணங்கள்.

* பௌத்த இலக்கியம், சமண இலக்கியம், சமயம் சாரா இலக்கியம்.

* நாளந்தா பல்கலைக் கழகம், நவரத்தினங்கள்.

* கணிதம், வானவியல், மருத்துவ அறிவியல்.

* மதுரா, பாடலிபுத்திரம் குறித்து பாஹியானின் குறிப்புகள்.

* குப்தப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் காரணங்கள்.

* நிலப்பிரபுத்துவம், ஹூணர்கள் படையெடுப்பு.

* காளிதாசர் - சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம்.

* ஹரிசேனர் - அலகாபாத் தூண் கல்வெட்டு.

மதிப்பிடுதல் :      

1. கவிராஜா என்ற பட்டம் யாருக்கு அளிக்கப்பட்டது?

2. குமார குப்தர் தோற்றுவித்த பல்கலைக்கழகம் எது?

3. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?    

கற்றல் விளைவுகள் :      

1. குப்தர் கால சான்றுகள், குப்த அரசர்கள் பற்றி அறிந்து கொண்டனர்.

2. குப்தர் கால அரசியல், சமூக, பொருளாதார நிலையை புரிந்து கொண்டனர்.

3. குப்தர் கால பண்பாடு, நாளந்தா பல்கலைக்கழகம் உணர்ந்து கொண்டனர்.

4. குப்தர் கால இலக்கியம், அறிவியல் வளர்ச்சியை தெரிந்து கொண்டனர்.       

தொடர்பணி :       

1. "குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்" - விவாதிக்க.

2. குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதத்தை விவரி,

3. குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க.     


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 5









No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts