Home

02 February 2022

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு. 


இன்று 02/02/2022 மாவட்டத்திற்குள் நடைபெற்று முடிந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு. 

High School HM Vacants


30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



EMIS SCHOOL புதிய செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!

EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்
பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 

இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Fully not working என்பதை தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது

Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்

மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்

Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 

School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த பின்பு தான் பள்ளி விவரங்கள் Sync ஆகும் 

அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும். 


பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால் எந்தெந்த வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்

உதாரணமாக ஒரு உயர் நிலைப் பள்ளியானது அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Section யும் select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்

Teachers Attendance School Login

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்

Teacher List Strudent List Stored Locally என வரும் Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு முறை Click செய்து OD Training Dt Deputation A Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்

Students Attendance Teacher Individual Login

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 

வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Local body Attendance School Login

பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். 


குறிப்பு

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும். 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன ?

2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.


* ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது.உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.


*நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆகா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


*சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


*ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  


*புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


*எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது.


*ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


*One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்


*நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்


*ரயில் நிலையங்களையும் நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரிய அளவில் திட்டம் வகுக்கப்படும்.


*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை


*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 


*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது                                    


*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.


*விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிப்பு


*ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.


*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன


*வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

01 February 2022

அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்து சான்றிதழ் (PLI Annual Statement) வாங்க இனி தபால் நிலையம் செல்ல வேண்டாம். சுலபமாக வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சேமிப்புக்காக வேண்டி அஞ்சலக ஆயுள் காப்பீடு (PLI) செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தும் நபர் அந்த நிதி ஆண்டில் PLI பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழை தபால் நிலையத்தில் வாங்கி வருமான வரி படிவத்துடன் இணைக்க வேண்டியது அவசியமாகும். 

08 September 2021

பாடப் புத்தகங்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு.

பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.


இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.


எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.


இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.

07 September 2021

முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ் : நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 


டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.


அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.


சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.


ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. 


முதலமைச்சரின் விளம்பரம் இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டது விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஊக்க ஊதியம் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 

Download Order 👇👇👇

Incentive Related Order

தமிழக அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அனுமதி.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை :


நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு!

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.


அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. 


மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

ஜாக்டோ ஜியோ 



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 

10, 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தற்போது நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட உள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளில் இனி 15 நாள்களுக்கு ஒருமுறை RTPCR Test : தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பிற்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டாலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கொரோனா பரவுகிறது என்று சொல்வது தவறான கருத்து. ஏற்கெனவே அறிகுறிகள் இருந்தவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


எந்தெந்த பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பதிவாகிறதோ அங்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே உட்கார வைக்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. 


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்புள்ளவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர், இதனால் பரவல் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.



கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணர்வகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் II-XII வகுப்புகள் வரை முந்தைய வகுப்பிற்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளை (Basic and Critical Concepts) உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக IX - XII ஆம் வகுப்புகளுக்கு Soft copy அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. 


இந்தப் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.


• IX, X வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக்கருத்துக்கள் (Fundamental Concepts) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்.


• அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (Basic and Critical Concepts) கொடுக்கப்பட்டிருக்கும்.


அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துகள் (Basic கொடுக்கப்பட்டிருக்கும். and Critical Concepts) மட்டும்


மிக அடிப்படையான பாடக்கருத்துகளில் (Fundamental Concepts) கற்றல் அடைவு போதிய அளவு மாணவர்கள் பெற்றிருப்பின், அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளைக் (Basic and Critical concepts) கற்பிக்கலாம்.


செப்டம்பர் 1 -ம் நாள் பள்ளி திறந்தவுடன் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடப்பொருளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு அலுவலர்கள், மாவட்டங்களுக்கு, பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்குச் சென்றபோது சில பள்ளிகளில் Online மூலம் முறையாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கேற்றவாறு மாணவர்களை தினசரி வரவழைக்கும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வகுப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லாமல் உள்ளது. உதாரணமாக சில பள்ளிகளில் IX - XII வகுப்புகள் தினசரி வருகை புரியவும், சில பள்ளிகளில் X, XII வகுப்பு மாணவர்கள் தினசரியும், IX, XI வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாளும் வருகை புரியுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியாக கட்டகத்தைப் பயன்படுத்த தேவை எழாத நிலை உருவாகியுள்ளது.


எனவே, ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளியில் ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனர் என்பதையும், மாணவர்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆசிரியர் உதவியுடன் ஆய்வு செய்து, அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


முந்தைய வகுப்புகளுக்கு விடுமுறையின் போது Online மூலம் வகுப்புகள் முறையான நடைபெற்றிருந்தால் முந்தைய வகுப்புகளுக்கான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துக்கள் (Basic and Critical Concepts) கற்பிக்கப்படவேண்டிய கால அளவை பாட ஆசிரியர்களே நிர்ணயித்துக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Online மூலம் வகுப்புகள் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளை 45 - 50 நாட்களுக்குள் கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு, ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் கற்றல் அடைவின் நிலைக்கு ஏற்ப, முறையாகத் திட்டமிட்டு, புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


முதல்வர் 110 விதியின் கீழ் இன்றைய அறிவிப்புகள்


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. 

1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்

முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு


அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்


ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்


அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்


புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்


அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்


சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்


அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்


வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்


அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்


முதலமைச்சரின் 110 விதியின் 13 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.

110 விதியின் கீழ் அறிவிப்புகள்


ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின்


2022 ஏப்ரல் 1 க்கு பதில் 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல் படுத்தப்படும் என சட்ட சபையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 

06 September 2021

NEET Exam (UG) - 2021 - Admit Card : நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.

12.09.2021 அன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு! 

NEET - NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) - 2021 - Admit Card! 


Admit Card for NEET EXAM

Download Link 1

Download Link 2


நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. 


நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.


விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது என அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவடைந்தது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் இடங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டது. இதனிடையே இதர தேர்வுகளும் செப்டம்பர் 12 ஆம் தேதியில் நடைபெறுவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். 


இதனை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்றும் ஒருசில மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறினர். தேவையெனில் மனுதாரர்கள் தேசிய தேர்வுகள் முகமையிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். 

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே திட்டங்கள் வகுக்கப்பட்டு உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து

2017-18 கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி. நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 4571675 மாணவர்கள் மடிக்கணினி பெற்றுள்ளனர். இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. 

பள்ளிகளின் வேலை நேரம் குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி : கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்.

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts