Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 8

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 8

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 8. காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு. 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. இந்தியப் பிரிவினையின் விளைவுகளை அறியச் செய்தல்.

2. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தலை புரியச் செய்தல்.

3. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைத்தலை உணரச் செய்தல்.

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடு எது?

2. மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது?

3. இந்தாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

பாடக் குறிப்புகள் :      

காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. இந்துக்கள் இந்நியாவிற்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானிற்கும் இடம்பெயர்ந்தனர்.

* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, வங்காளம் மற்றும் பஞ்சாப்

* இங்கிலாந்து பிரதமர் அட்லி அறிக்கை, மௌண்ட்பேட்டன் திட்டம்

* ராட்க்ளிஃப் எல்லைக் கோடும் இந்தியப் பிரிவினையும்

* பிரிவினைக்கு காந்தியடிகளின் எதிர்ப்பும் மனமாற்றமும்

* பிரிவினையின் விளைவுகள் - வன்முறைச் சம்பவங்கள்

* இந்திய அரசமைப்பு உருவாக்கம் - அம்பேத்கர்

* அரசமைப்பு நிர்ணயச் சபை, அரசமைப்பு வரைவுக் குழு

* இந்திய அரசமைப்பின் சிறப்புகள், குறிக்கோள் தீர்மானம்

* சுதேச அரசுகளின் இணைப்பு - படேல்

* இணைப்புறுதி ஆவணம், மன்னர் மானியங்கள்

* சுதேச அரசுகளின் இணைப்பு போராட்டம்

* ஜூனாகத், ஹைதராபாத், காஷ்மீர் இணைப்பு

* மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு

* பட்டாபி சீதாராமையா, பொட்டி ஸ்ரீ ராமுலு

* ஜேவிபி குழு, பசல் அலி குழு, மாநில மறுசீரமைப்புச் சட்டம்

* இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - நேரு

* பஞ்சசீலக் கொள்கை, இந்தியா - சீனாப் போர்

* அணிசேரா இயக்கம், பாண்டுங் பேரறிக்கை

மதிப்பிடுதல் :      

1. மொழிவாரி அமைக்கப்பட்ட முதல் மாநிலம் எது?

2. காந்தியடிகள் படுகைாலை செய்யப்பட்ட நாள் என்ன?

3. அரசமைப்பின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தவர் யார்?

கற்றல் விளைவுகள் :      

1. இந்தியப் பிரிவினையின் விளைவுகளை அறிந்து கொண்டனர்.

2. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தலை புரிந்து கொண்டனர்.

3. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பை உணர்ந்து கொண்டனர்.

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. 1920 - 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பை விவாதிக்க.

2. சுதேச அரசுகளை இணைப்பது தொடர்பான பிரச்சினைகளை விவரி.

3. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 8








No comments:

Post a Comment