Home

10 February 2022

11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 


சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பாணைக்கு இணங்க, மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டியுள்ள நிலையில் 11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை-1 /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 /தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்


மேலும் அதனையடுத்து 14.2.2022 முதல் திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய்வுகள் நடைபெறும் எனவும், இது சார்ந்த தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேற்படி ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 




No comments:

Post a Comment