வாழ்க்கையில் நமக்கு எவ்வளவோ துன்பங்கள் (கஷ்டங்கள்) இருக்கும். ஆனால் நாம் செய்யும் வேலையில் வெற்றி பெறும் போது நம்முடைய துன்பங்கள் எல்லாம் பறந்து போகிறது. அந்த ஒரு கனம் எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் அதை மறைந்து ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். அதனால் துன்பங்களை நினைத்து கவலைப்படாமல், நம்முடைய வெற்றியை நோக்கி பயணிப்பதே வாழ்கையை மாற்றும்.